காஞ்சிபுரம், நவ.16:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துபவர் களுக்கான கட்டணம் ரூ.300 வீதம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியலில் இளங்கலைப்பட்டம் அல்லது யோகா மற்றும் இயற்கை அறிவியலில் பட்டயச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
யோகா வகுப்புகள் காலை 6 முதல் 7 மணி வரையும்,பின்னர் 7.15 மணி முதல் 8.15 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 5 மணி வரையும், மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரையுó என ஒரு நாளைக்கு மொத்தம் 4 அமர்வுகளாக நடத்தப்படும்.
தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்கள் தங்களுடைய சுயவிபரம் மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் 19 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் வந்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)
