சென்னை :
முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து கூறுகையில், “நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறி இருந்தார்.
மேலும் 2026ஆம் ஆண்டு சட்ட சபை தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் தேதி தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செவ்வாய் கிழமை) காலை வெளியிட்டார்.
இதன்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆய்வு கூட்டம்
அதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதுத்தேர்வில் எந்தவொரு மாணவரும் விடுபடாமல் பங்கேற்பதை உறுதி செய்வதற்கான பணிகள், தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து கலந்துரையாடி, ஆலோசனைகளை வழங்கினோம்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
“தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துள்ளோம். 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்விற்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வை எழுத வேண்டும்” என்று அவர் கூறினார்.
10th Std
11th Std
12th Std
அன்பு மாணவர்களே...
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 4, 2025
மகிழ்ச்சியாக தேர்வுக்கு தயார் ஆகுங்கள்!
இது உங்களுக்கு மட்டுமல்ல எனக்குமான ஆசிரியர்களுக்குமான தேர்வும்தான்! #TNPublicExamdates#12thExam#10thExam @tnschoolsedu pic.twitter.com/fKzHaU8Lep
.png)