2025-ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது. இதுகுறித்து தகுதிவாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தகுதி:
விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை
இத்தேர்விற்குரிய விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேலூர் மாவட்டத்தின் தேர்வு மையமாக உத்தேசிக்கப்பட்டுள்ள வேலூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் விண்ணப்பதாரரே நேரில் சென்று விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வேலூர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர்/முதல்வருக்கு கிடைக்க வேண்டிய கடைசி தேதி 17.10.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.