தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்தமதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கியமதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனிததலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய
2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர்,
3.வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில்,
4.பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி,
5.நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனிததலங்களையும்,
- சமண மத தொடர்புடைய
1.இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமணகோவில், ஜெய்சால்மர் சமணகோவில்,
2.ஜார்காண்டில் உள்ள சிக்கர்ஜி
3.குஜராத்தில் உள்ள பாலிடனா,
4. பீகாரில் உள்ள பவபுரி சமணகோவில் போன்ற இடங்கள்,
5.கர்நாடகாவில் சரவணபெல கோலா போன்ற புனிததலங்களையும் மற்றும்
- சீக்கிய மத தொடர்புடைய
1.பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட்ஸ்ரீ கேசகரசாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமாசாகிப்,
2. பீகாரில் உள்ள தக்ட்ஸ்ரீ ஹர்மந்திர்சாகிப் (குருகோவிந்த்சிங்), தக்ட்ஸ்ரீ ஹசூர்சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள்,
3.பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீநான்காணாசாகிப், குருத்வாரா ஸ்ரீசச்சாசௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீபஞ்சசாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீதெஹ்ராசாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
இத்திட்டத்தின்கீழ் 01.07.2025க்கு பிறகு புனிதபயணம் மேற்கொள்பவர்களுக்கு முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.
இதற்கானவிண்ணப்பபடிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.
மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி - ஆணையர், சிறுபான்மையினர்நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600005.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் புத்த, சமண, சீக்கியமதத்தினர் அவரவர் மதங்களுக்கான புனிததலங்களுக்கு புனிதபயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளுர்