வேலூர்:
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 02.08.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை, வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதிகளைக் கொண்ட வேலையாளர்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.
பங்கேற்கும் தகுதியுடையோர்:
-
10ஆம் வகுப்பு
-
12ஆம் வகுப்பு
-
தொழிற்பயிற்சி
-
பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு
-
முதுகலை பட்டம்
-
தொழில்நுட்ப கல்வி (பொறியியல், செவிலியர், பார்மஸி உள்ளிட்டவை)
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கான இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றாலும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருக்கும் பதிவு ரத்து செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைநாடுநர்கள், பங்கேற்க முன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்யவேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப அவர்கள், மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.