மின்மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகில் தண்ணீர் தேங்கியிருக்கும் சூழலில் அவற்றின் அருகில் செல்லக் கூடாது. அத்தகைய நிகழ்வுகள் குறித்து உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்கள் அமைப்பவர்கள் மின்கம்பிகள் அருகே பணிபுரியும் போது பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய வேண்டும். மேலும், கனரக வாகனங்களை மின்மாற்றிகள் அல்லது மின்கம்பங்கள் அருகில் நிறுத்தி சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ செய்யக்கூடாது.
தேர்த்திருவிழாக்கள் நடத்துபவர்கள் முன்கூட்டியே மின்வாரிய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் தேரோட்டம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் வழியாக 94987 94987 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, மின்வாரியத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இதன் மூலம் மின்பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon